கர்நாடகாவில் முதலமைச்சரின் வாகனத்தை வழிமறித்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், பெங்களூரு அடுத்த தொட்டபல்லாபுரா பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோயிலுக்கு அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்ற போது, சுங்கச்சாவடியில் கண்காணிப்பில் இருந்த போலீசார், காரை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.