மகிந்தா ராஜபக்சேவின் சகோதராரான பசில் ராஜபக்சே தனது நாடளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே, தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ராஜினாமா செய்த பிறகு, அப்பதவியில் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவியிலிருந்து விலகும் பசில் ராஜபக்சே அமெரிக்க செல்லவுள்ளதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.