தற்போதைய செய்திகள்

கனல் கண்ணனுக்கு ஜாமின்..நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்

தந்தி டிவி

திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. கிருஸ்த்துவம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜாமின் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மனு விசாரணைக்கு வந்த நிலையில், நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. மேலும், நாகர்கோவில் சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்தில் வரும் 30 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்