நீலகிரி அருகே சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் உடற்கூராய்வு செய்தனர்.
கூடலூர் அடுத்த வாச்சிகொல்லி பகுதியில் யானைகளின் அலரல் சத்தம் கேட்டு வனத்துறையினர் சென்றனர்.
அப்போது சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்க, தாய் யானை ஒன்று போராடிக் கொண்டிருந்தது. சேற்றில் சிக்கியதால் குட்டி யானை உயிரிழந்ததை அறிந்த வனத்துறை அதிகாரிகள், உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்தனர்.