தற்போதைய செய்திகள்

கழிவறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு - திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் கழிவறையில் சடலமாக கிடந்த ஆண் சிசுவை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் சந்தேகத்திற்கு கிடமாக அட்டை பெட்டி ஒன்று இருந்துள்ளது. அதனை சோதனையிட்ட மருத்துவ ஊழியர்கள், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது, தொடர்பாக போலீசாருக்கு தகவலும் அளித்தனர். குழந்தையின் கழுத்து மற்றும் தலையில் காயம் இருப்பதால் கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். கட்டடத்தில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை என்பதால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்