தற்போதைய செய்திகள்

கழிவறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு - திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் கழிவறையில் சடலமாக கிடந்த ஆண் சிசுவை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் சந்தேகத்திற்கு கிடமாக அட்டை பெட்டி ஒன்று இருந்துள்ளது. அதனை சோதனையிட்ட மருத்துவ ஊழியர்கள், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது, தொடர்பாக போலீசாருக்கு தகவலும் அளித்தனர். குழந்தையின் கழுத்து மற்றும் தலையில் காயம் இருப்பதால் கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். கட்டடத்தில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை என்பதால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை