தற்போதைய செய்திகள்

பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய போலீஸ் வாகனம் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

ஆவடியில் ரோந்து பணியை முடித்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போலீசாரின் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் மாரிமுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அதிகாலை பணியை முடித்து கொண்டு ரோந்து வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஜீப்பை ஏட்டு மகாவீரன் இயக்கிய போது, திருமுல்லை வாயில் கல்லரை அருகே மழையால் பிரேக் பிடிக்காத வாகனம் சாலையோரம் இருந்த தள்ளுவண்டி மீது மோதியது. விபத்தில் காவல் ஆய்வாளருக்கு நெஞ்சில் காயமும், ஏட்டுக்கு கை முறிவும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்