தற்போதைய செய்திகள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ - CBI-க்கு புகார் அனுப்பிய அதிமுக

தந்தி டிவி

தமிழக நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக, சிபிஐ விசாரிக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் மனு அனுப்பியுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும், ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விவாத பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இரண்டாவதாக ஒரு ஆடியோ வெளியானதையடுத்து, இது தொடர்பாக, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும், ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிந்து, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்