தற்போதைய செய்திகள்

"தற்கொலை வழக்காக மாற்ற முயற்சி" - சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையே இல்லை - ஸ்ரீமதியின் தாய் பேட்டி

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில், சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், நீதிமன்ற கண்காணிப்பில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்காட வந்த மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனை, ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், இந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக, தற்கொலை என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபுவை சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்