தற்போதைய செய்திகள்

"விழுப்புரத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி" விசிக எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

கோலியனூர் அருகே, மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பட்டியியல் சமூக மக்களை வழிபட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் மற்றும் சிந்தனை செல்வன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பழனியை நேரில் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கோவிலுக்கு வழிபட வருபவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது எனவும், கோவிலை இந்து அறநிலையத்துறை தனது பொறுப்பில் எடுத்து, அனைத்து சமூகத்தினரும் வழிபடுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ஒரு தரப்புக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்