தற்போதைய செய்திகள்

ஏ.டி.எம். கொள்ளை முயற்சி...போலீசாரின் சாமர்த்தியத்தால் தப்பிய பல லட்சம் பணம் - வெளியான சிசிடிவி

தந்தி டிவி

சென்னை ஆவடி அருகே, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே பொத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த அனைத்து இணைப்புகளையும் கட்டிங் பிளேடு மூலம் துண்டித்துவிட்டு கொள்ளையடிக்க முயன்றார். மேலும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்றபோது சத்தம் கேட்டதால், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரும்புக்கதவை திறந்து, அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்த எட்வின் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்