தற்போதைய செய்திகள்

ஆசியக்கோப்பை டேபிள் டென்னிஸ்.. சீன வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை

தந்தி டிவி

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், சீன தைபே வீராங்கனை சென் சு யு - உடன் மனிகா பத்ரா மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 4க்கு 3 என்ற கேம் கணக்கில் மனிகா பத்ரா போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன்மூலம், ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்