தற்போதைய செய்திகள்

ஆசியக்கோப்பை டேபிள் டென்னிஸ்.. சீன வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை

தந்தி டிவி

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், சீன தைபே வீராங்கனை சென் சு யு - உடன் மனிகா பத்ரா மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 4க்கு 3 என்ற கேம் கணக்கில் மனிகா பத்ரா போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன்மூலம், ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்