தற்போதைய செய்திகள்

சொகுசு காரில் வந்து உல்லாசமாக திருட்டு..வெளியூர் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

தந்தி டிவி

பல்லடம் அருகே, சொகுசு காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்று திரும்பிய நிலையில், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்...

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்