தற்போதைய செய்திகள்

சொகுசு காரில் வந்து உல்லாசமாக திருட்டு..வெளியூர் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

தந்தி டிவி

பல்லடம் அருகே, சொகுசு காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்று திரும்பிய நிலையில், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை