தற்போதைய செய்திகள்

மது போதையில் தகராறு.. பார் ஊழியர்களை காலி பாட்டில்களால் தாக்கிய இருவர் கைது

தந்தி டிவி

கோவை மது போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் காலி பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் மீது வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அறிவொளி நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக்கில் தினேஷ் மற்றும் அஜித் என்பவர்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அவர்கள் டாஸ்மாக்கில் உள்ள மேசையை சேதம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஊழியர்கள் அவர்களை கண்டித்துள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த அவ்விருவர் காலி பாட்டில்களை கொண்டு எறிந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து ஊழியர்கள் அளித்த புகாரில், இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு