தற்போதைய செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் தகராறு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது கல் வீச்சு - வீடியோ வெளியாகி பரபரப்பு

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் அடிப்படை வசிதிகள் கேட்டு ஊராட்சி மன்ற தலைவியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவியை தரக்குறைவாக பேசி, ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சத்தியபிரபு, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவதாம் முற்றி தகராறு ஏற்படவே, சத்தியபிரபுவை சிலர் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த சத்தியபிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்