தற்போதைய செய்திகள்

பருத்தி, புண்ணாக்கு, கொள்ளு, பாதாம்.. ரேஸுக்கு நாங்க தயாருப்பா - ரோட்ட ரெடியா வையுங்க..

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அறந்தாங்கியில் ரேக்ளா பந்தயத்துக்கு காளைகள் தயாராகி வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தப்படியாக ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம். தைப் பொங்கலுக்கு ரேக்ளா பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு, அறந்தாங்கியில் காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பருத்தி, புண்ணாக்கு, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, கொள்ளு, பாதாம், பேரிச்சம்பழம் உள்ளிட்டவை மாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், காலையில் மாடுகளை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்று, மசாஜ் செய்த பிறகு 20 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு இணையாக ரேக்ளா பந்தயத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, காளைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?