தற்போதைய செய்திகள்

பருத்தி, புண்ணாக்கு, கொள்ளு, பாதாம்.. ரேஸுக்கு நாங்க தயாருப்பா - ரோட்ட ரெடியா வையுங்க..

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அறந்தாங்கியில் ரேக்ளா பந்தயத்துக்கு காளைகள் தயாராகி வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தப்படியாக ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம். தைப் பொங்கலுக்கு ரேக்ளா பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு, அறந்தாங்கியில் காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பருத்தி, புண்ணாக்கு, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, கொள்ளு, பாதாம், பேரிச்சம்பழம் உள்ளிட்டவை மாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், காலையில் மாடுகளை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்று, மசாஜ் செய்த பிறகு 20 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு இணையாக ரேக்ளா பந்தயத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, காளைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்