தற்போதைய செய்திகள்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் லிஃப்டில் சிக்கிய சிறுவன்

தந்தி டிவி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் லிஃப்டில் சிக்கிய சிறுவன்

தாய் டிக்கெட் எடுக்க சென்ற நிலையில், லிஃப்டில் சிக்கிக் கொண்ட 12 வயது சிறுவன்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இன்று காலை யாஸ்மின் என்பவர் தன் குழந்தையுடன் சென்னை செல்ல அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வந்தார். அவரை வழி அனுப்ப அவரது மகன் ரியாஸ் உடன் வந்தார்.

இதனையடுத்து ரயில் வரும் இரண்டாம் நடை மேடைக்கு படிக்கட்டு உதவியுடன் மேம்பாலத்திற்கு மேலே சென்ற  ரியாஸ், கீழே  இறங்குவதற்காக லிப்ட் பயன்படுத்தி உள்ளார்.

அப்போது லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டு பாதியில் நின்றது.

இது சற்றும் எதிர்பாராத சிறுவன் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்துள்ளார்.

இந்நிலையில் அவர்களை தேடி வந்த தாய் மகன் மற்றும் குழந்தை லிப்டில் சிக்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார்

உடனடியாக விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், லிப்ட்டை சரி செய்து இயக்கினர். பின்னர் சிறுவன் மற்றும் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை