தற்போதைய செய்திகள்

நெருங்கும் தெலுங்கு வருடப்பிறப்பு...ரூ.3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. வரும் புதன்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு போச்சம்பள்ளி வார சந்தைக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், 5 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகள் கூடுதலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வியாபாரிகளும் பொதுமக்களும் சந்தையில் குவிந்தனர். வழக்கமாக 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் 10 கிலோ எடை கொண்ட ஆடு, இன்று 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. எடைக்கு ஏற்றவாறு 7 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்