தற்போதைய செய்திகள்

ஜே.பி.நட்டாவை சந்தித்த பின் அண்ணாமலை போட்ட ட்வீட்

தந்தி டிவி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை தென் ஆப்பிரிக்கா வகித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் ஆளுங்கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி, வரும் மாதம் 18 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில், பிரிக்ஸ் அரசியல் கட்சிகளுக்கான உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. இதில் பாஜகவின் பிரதிநிதிகளாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆந்திராவை சேர்ந்த வினுஷா ரெட்டி, சத்யேன் குலாப்கர், புஷ்கர் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, அண்ணாமலை உட்பட 4 பேரும், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்தனர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, உச்சி மாநாட்டிற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றதாகவும், இந்த சந்திப்பு மகிழ்ச்சியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்