தற்போதைய செய்திகள்

பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

தந்தி டிவி

பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில், அன்னாபிஷேக விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான அன்னாபிஷேகம் சாத்தும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 500 கிலோ சமைத்த பச்சரிசி, சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்