தற்போதைய செய்திகள்

ANI செய்தி நிறுவனத்துக்கு வந்த சோதனை - ட்விட்டர் நிறுவனம் அதிர்ச்சி விளக்கம்

தந்தி டிவி

ட்விட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்ட ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியது முதல், அந்த நிறுவனம் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், பல முன்னணி ஊடகங்களுக்கு செய்தி வழங்கி வரும் "ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல்" என்னும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் திடீரென்று முடக்கியது. இதுதொடர்பாக, ஏ.என்.ஐ. செய்தி ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு ட்விட்டர் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், ஒரு ட்விட்டர் கணக்கை தொடங்க வேண்டுமெனில் அதன் உரிமையாளர் 13 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், அந்த வயதை பூர்த்தி செய்யவில்லை என்பதால், ஏ.என்.ஐ.-யின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில மணி நேரத்துக்குப் பிறகு ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்