தற்போதைய செய்திகள்

ஒரே நிகழ்ச்சியில் திமுக,பாஜகவினர்.. மேடையில் இடம் கொடுக்காததால் ஆத்திரம்

தந்தி டிவி

சென்னை, சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டையில் நின்று செல்ல விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் எல். முருகன் விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் பெரும்பாலான நாற்காலிகளில் திமுக நிர்வாகிகளே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகிகளுக்கு மேடையில் இடம் கிடைக்காததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும், திமுகவினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு நிகழ்ச்சியே பரபரப்பானது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை