தற்போதைய செய்திகள்

"ஆண்டாள் கோயில் யானை நலமாக உள்ளது" - பீட்டாவின் குற்றச்சாட்டுக்கு பதில்

தந்தி டிவி

ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான யானை ஜெயமால்யதா, தாக்கப்படுவதாக பீட்டா அமைப்பு செய்தி வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதன் அறிக்கையை அசாம் மாநில அரசுக்கு அனுப்பியது.

இதனிடையே, யானை தொடர்ந்து தாக்கப்படுவதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பீட்டா அமைப்பு செய்தி வெளியிட்டது.

இதன் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அசாம் மாநில தலைமை வன காவலர் ஆனந்த், யானையை பரிசோதித்தார்.

பின்னர், யானை நலமுடன் இருப்பதாகவும், யானைக்கு எந்த காயமும் இல்லை எனவும் கூறினார்.

மேலும், பீட்டாவின் அறிவிப்புகள் உண்மைக்கு புறம்பானது என்றார்.

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்