தற்போதைய செய்திகள்

"அவர் அப்பவே அப்படி.. இப்ப கேட்கவா வேணும்" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய சூர்யா சிவா

தந்தி டிவி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நம்பிக்கையை பெற்று மீண்டு வருவேன் என்று சூர்யா சிவா கூறியுள்ளார்.

தமிழக பாஜகவில், ஓபிசி பிரிவு மாநில செயலாளராக இருந்த சூர்யா சிவாவுக்கும், சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சி சரணுக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பிறகு, இருவரும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து, சமாதானம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, சூர்யா சிவாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ள சூர்யா சிவா, மீண்டும் அவருடைய நம்பிக்கையை பெற்று மீண்டு வருவேன் என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், அண்ணாமலை, கர்நாடக காவல் துறையில் பணியாற்றியபோது, ஒரே காவல் நிலையத்தில் 71 காவலர்கள இடமாற்றம் செய்ததை குறிப்பிட்டுள்ள சூர்யா சிவா, 'அவர் அப்பவே அப்படி... இப்ப கேட்கவா வேண்டும்...' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு