தற்போதைய செய்திகள்

முதியவரை கட்டையால் தாக்கி கொலை.. பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

உடுமலை அருகே பேருந்து நிலையத்தில் மது அருந்த அனுமதிக்காத ஆதரவற்ற முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கொங்கலக்குறிச்சி பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற முதியவர் ஒருவர் தங்கியிருந்தார். வியாழக்கிழமை இரவு, அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மது பாட்டிலுடன் பேருந்து நிலையத்துக்குச் சென்றபோது, அந்த முதியவர் மது அருந்த அனுமதி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பழனியப்பன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் அந்த முதியவர் உயிரிழந்தார். மறுநாள் காலை இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் பழனியப்பனை போலீசார் கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி