தற்போதைய செய்திகள்

முதியவரை கட்டையால் தாக்கி கொலை.. பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

உடுமலை அருகே பேருந்து நிலையத்தில் மது அருந்த அனுமதிக்காத ஆதரவற்ற முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கொங்கலக்குறிச்சி பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற முதியவர் ஒருவர் தங்கியிருந்தார். வியாழக்கிழமை இரவு, அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மது பாட்டிலுடன் பேருந்து நிலையத்துக்குச் சென்றபோது, அந்த முதியவர் மது அருந்த அனுமதி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பழனியப்பன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் அந்த முதியவர் உயிரிழந்தார். மறுநாள் காலை இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் பழனியப்பனை போலீசார் கைது செய்தனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி