தற்போதைய செய்திகள்

மின் கம்பி மீது உரசிய இரும்பு தகடு.. நொடியில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - விழுப்புரம் அருகே நேர்ந்த சோகம்

தந்தி டிவி

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டியன். முதுகலை பட்டதாரியான இவர், தனது வீட்டிற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கொட்டகையில் இருந்த இரும்பு தகடை இளைஞர் தூக்கி சென்றபோது, அருகில் இருந்த மின்கம்பி தகடின் மீது உரசியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டார். உடனே, அக்கம்பக்கத்தினர் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், வரும் வழியிலே இளைஞர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதுகலை இளைஞரின் இந்த பரிதாப மரணம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"