தற்போதைய செய்திகள்

அரசு அதிகாரியாக அசாத்திய நடிப்பு.. மொத்த பொருளும் சுருட்டி விபூதி அடித்த நபர்

தந்தி டிவி

ராசிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவன்... இவரது வீட்டிற்கு சோலார் பேனலை ஆய்வு செய்ய அரசு சார்பில் வந்துள்ள அதிகாரி எனக் கூறி, ஒருவர் வந்துள்ளார். பரமசிவத்தை பேனல் அருகே சென்று மின்சாரம் வருகிறதா எனப் பார்க்க சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த 9 பவுன் நகைகளை அவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக, சூலூர் காவல் நிலையத்தில் பரமசிவன் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஊத்துப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பதும், தொடர்ந்து இதே பாணியில் அவர் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மாரிமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்