தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் முன் தீக்குளிக்க முயன்ற முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சொத்து பிரச்சனை காரணமாக வீட்டை இழந்த முதியவர் ஒருவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முதியவர் ஒருவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக முதியவரை நெருங்கிய போலீசார், அவரை தடுத்து நிறுத்தியதுடன், விசாராணை மேற்கொண்டனர். அதில், சொத்து பிரச்சனை காரணமாக வீட்டை இழந்த விரக்தியில் முதியவர் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி