தற்போதைய செய்திகள்

இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த பாம்பு - பிரேத பரிசோதனையில் உஷ்.. உஷ்.. சத்தம் - அலறி ஓடிய பெண்

தந்தி டிவி

அமெரிக்காவில் இறந்த நபர் ஒருவரது தொடையில் இருந்து உயிருடன் பாம்பு ஒன்றை கண்டுபிடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட்டை சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன். பிரேத பரிசோதனை நிபுணரான இவர் விரும்பியே அந்த பணியை செய்து வருகிறார். இந்நிலையில், தங்களின் பணி குறித்து மனம் திறந்து பேட்டி அளித்த அவர், இறந்த சடலங்களை பிரேத பரிசோதனை செய்யும் ஏற்படும் இன்னல்களை பட்டியலிட்டார். பொதுவாக அழுகி போன உடல்களில் பல்வேறு பூச்சிகள் மற்றும் வண்டுகள் காணப்படுவது சகஜம் என்றாலும், ஒரு முறை ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சிதைந்த உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவரது உடலில் உயிருடன் பாம்பு ஒன்று இருந்ததாக அவர் கூறியுள்ளார். இப்படி இவர் பகிர்ந்து கொண்ட பணி அனுபவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி