சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி சம்பளம் வாங்காமல் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குநர் மடோன் அஷ்வினும், நடிகர் விஜய் சேதுபதியும் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே நண்பர்களாக இருந்ததாகவும், அந்த நட்புக்காகவே விஜய் சேதுபதி பணம் ஏதும் பெறாமல் பின்னணி குரல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.