'லால் சலாம்' படத்தில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ் புத்தாண்டையொட்டி படக்குழுவினருக்கு தனது வீட்டில் சிறப்பு விருந்து வழங்கினார். இந்த நிகழ்வில் அவரது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோரும் பங்கேற்ற நிலையில், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "எனது உலகம்... எனது குடும்பம்... நமது வாழ்க்கையை நமது புன்னைகையே தீர்மானிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.