தற்போதைய செய்திகள்

தள்ளாடும் ஏர் இந்தியா ? டாடா குழுமம் எடுக்கும் அதிரடி முடிவு - இனி யாரும் பறக்கலாம் ஜாலியா..

தந்தி டிவி

500 புதிய ஜெட் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை 2021 அக்டோபரில், மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியது.

தற்போது ஏர் இந்தியா வசம் தற்போது 153 விமானங்கள் உள்ளன. ஏர் இந்தியாவை விஸ்தாராவுடன் இணைந்த பின் இது 218ஆக அதிகரிக்க உள்ளது.

இந்நிலையில், 8.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. 400 குறுகிய அகலம் கொண்ட ஜெட் விமானங்களும், 100 அகலமான ஜெட் விமானங்களும் வாங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பத்துக்கும் அதிமாகன ஏ 350, போயிங் 787, போயிங் 777 ரக பிரமாண்ட விமானங்களும் இந்த பட்டியலில் உள்ளன. தற்போது இந்திய சந்தையில் 10 சதவீதத்தையும், சர்வதேச சந்தையில் 12 சதவீதத்தையும் ஏர் இந்தியா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை