தற்போதைய செய்திகள்

"பள்ளிகளுக்கு எதிரில் அறிவு சார் மையம்" - எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் கைது

தந்தி டிவி

மேட்டுப்பாளையத்தில், பள்ளிகளுக்கு எதிரில் அறிவுசார் மையம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தச் சென்ற இரண்டு பெண் கவுன்சில்கள் உள்பட அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர், கைது செய்யப்பட்டனர்.

மணி நகரில், நகரவை தொடக்கப்பள்ளி மற்றும் நகரவை உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிகளுக்கு எதிரில் நகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் 5500 சதுர அடியில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 85 லட்சம் செலவில் அறிவு சார் மையம் அமைக்க அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு இடத்தை அளவிட வந்தவர்களை தடுத்த நிறுத்திய அதிமுக கவுன்சிலர்கள், கைது செய்யப்பட்டனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?