தற்போதைய செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் சென்று துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை - சீனாவை எச்சரிக்கும் வகையில் நடத்தப்பட்டதா?

தந்தி டிவி

அணு ஆயுதங்களை சுமந்து சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டரில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 பெல்லஸ்டிக் ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து மாலை 5.30 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் சென்று, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் தன்மை கொண்ட‌து.

அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய - சீன வீர‌ர்கள் மோதிக் கொண்ட இந்த சூழ்நிலையில், இரவு நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்திய ராணுவம் சோதனை செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த‌தாக கருதப்படுகிறது.  

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்