தற்போதைய செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தந்தி டிவி
• அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன • இதற்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். • அதில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு, சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது • இது, நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது • பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எக்காரணமும் இல்லாமல், பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது • இவ்வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்