தற்போதைய செய்திகள்

மீண்டெழும் அதானி குழுமம்... கடன்களை செலுத்தியதால் உயரும் பங்குகள்

தந்தி டிவி
• 21 ஆயிரத்து 690 கோடி ரூபாய் அளவிலான கடன்களை அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தியுள்ளது. • ஜனவரி 24இல் வெளியான ஹிண்டனர்பர்க் அறிக்கையினால், அதானி குழும பங்கு விலைகள் 60 சதவீதம் வரை சரிந்தால், முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. • அதானி குழுமத்தின் மொத்த கடன் சுமை ஜனவரியில் 2.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், 21 ஆயிரத்து 690 கோடி ரூபாய் அளவிலான கடன்களை அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தி, அதற்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை மீட்டுள்ளது. • இதில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த பெறப்பட்ட 4 ஆயிரத்து 90 கோடி ரூபாய் கடன்களுன் அடங்கும். அதானி குழுமம் கடந்த மாதத்தில் இரண்டு கட்டமாக 16 ஆயிரத்து 577 கோடி ரூபாய் அளவிலான கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. • இதன் விளைவாக மார்ச் 10 நிலவரப்படி, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 9.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. • இன்று அதானி குழும பங்கு விலைகள் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை