தற்போதைய செய்திகள்

"இனி ராஜ்கிரணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" - வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா பேட்டி

தந்தி டிவி

வளர்ப்பு மகள் திருமண விவகாரத்தில், நடிகர் ராஜ்கிரணின் மனைவி, முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இ

தனிடையே, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் முனீஸ்ராஜ் மற்றும் ஜீனத்பிரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நடிகர் ராஜ்கிரணின் மனைவி கதீஜா புகார் அளித்தார்.

இதுதொடர்பாக முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜ்கிரணின் மனைவி கதீஜா மற்றும் ஜீனத்பிரியா தரப்பினர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

அப்போது, சமூக வலைதளங்கள் வாயிலாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யக்கூடாது, பிரச்சினை ஏற்படுமாயின் காவல்துறை அல்லது நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்டவை போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் போலீசாரின் அறிவுரைப்படி செயல்படுவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை