திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபு, தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். வழிப்பாட்டிற்கு பின், அவரை பார்த்து ரசிகர்கள் சூழ்ந்த நிலையில், அவர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், முழு ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும், அடுத்த வாரம் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.