தற்போதைய செய்திகள்

பைக் மீது கார் மோதி விபத்து - நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் - கால்கள் மீது ஏறி இறங்கிய லாரி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, லாரி ஏறியதில் பெண்ணின் இரு கால்களும் நசுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜும், அவருடைய மனைவி பார்வதியும் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மேலுமலை கனவாய் என்ற இடத்தில் வந்தபோது, அவர்களின் வாகன்திதன் மீது கார் மோதியதில், பார்வதி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே தூக்கி வீடப்பட்டார்.

அப்போது, பின்னால் வந்த லாரி ஏறியதில், பார்வதியின் இரண்டு கால்களும் நசுங்கின.

வலியால் கதறி அழுத அவரை, போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்