தற்போதைய செய்திகள்

சோசியல் மீடியாவில் காதல் - இளைஞரும், பள்ளி மாணவியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, சமூகவலைதளம் மூலம் காதலித்து வந்த ஐடிஐ மாணவனும், பள்ளி மாணவியும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

தந்தி டிவி

 போளூர் அடுத்த வடமாதிமங்கலம் ரயில்வே தண்டவாளத்தில், அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், போளூரில் உள்ள தனியார் ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும், ஆரணி அருகே வசித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவரும், காட்பாடி நோக்கிச் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில், விழுப்புரத்திலிருந்து திருப்பதி நோக்கிச் செல்லும் ரயில் முன் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்