தற்போதைய செய்திகள்

திடீரென 60 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய கிணறு - பீதியில் கலங்கி இருக்கும் மக்கள்

தந்தி டிவி

ஆம்பூர் அருகே தொடர் மழையால் கிணறு ஒன்று 60 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், இந்த கிணறு சுமார் 60 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இத்தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கிணற்றை சுற்றியுள்ள 2 வீடுகளும் சரிந்து கிணற்றில் விழும் அபாயம் உள்ளதால், அங்கு வசிப்பவர்களை வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கிணற்றில் விழும் அபாயம் இருப்பதால், அவற்றை அகற்றி விட்டு கிணற்றை முழுவதும் மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை