தற்போதைய செய்திகள்

உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி... நிலத்தை ஆக்கிரமித்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் நபரை, உயிரிழந்ததாகக் கூறி போலி இறப்பு சான்றிதழ் மூலம், நில ஆக்கிரமிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நாமக்கல் மாவட்டம், கூனம்வேலம்பட்டி புதூரில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஊர் பெரியவர்கள் 8 பேர் பெயரில், நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதில் அப்பகுதியினர் தறி தொழில் நடத்தி வந்தனர். நிலம் வாங்கியவர்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில், சுப்புலெட்சுமி என்ற மூதாட்டி மட்டும் உயிருடன் உள்ளார். இந்நிலையில், அவரும் உயிரிழந்து விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நடராஜன், முருகேசன், திருநாவுக்கரசு ஆகியோர் போலி இறப்பு சான்றிதழ் மூலம் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி, சம்பந்தப்பட்ட மூதாட்டியுடன் ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை