தற்போதைய செய்திகள்

உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி... நிலத்தை ஆக்கிரமித்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் நபரை, உயிரிழந்ததாகக் கூறி போலி இறப்பு சான்றிதழ் மூலம், நில ஆக்கிரமிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நாமக்கல் மாவட்டம், கூனம்வேலம்பட்டி புதூரில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஊர் பெரியவர்கள் 8 பேர் பெயரில், நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதில் அப்பகுதியினர் தறி தொழில் நடத்தி வந்தனர். நிலம் வாங்கியவர்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில், சுப்புலெட்சுமி என்ற மூதாட்டி மட்டும் உயிருடன் உள்ளார். இந்நிலையில், அவரும் உயிரிழந்து விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நடராஜன், முருகேசன், திருநாவுக்கரசு ஆகியோர் போலி இறப்பு சான்றிதழ் மூலம் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி, சம்பந்தப்பட்ட மூதாட்டியுடன் ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு