தற்போதைய செய்திகள்

நவரத்தினக் கல்லை நம்பி சென்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு அதிர்ச்சி - சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி

திண்டுக்கல்லில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நவரத்தினக் கல் விற்றுத் தரக்கோரி, 5 லட்சம் ரூபாயை மோசடி செய்து தப்பிய கும்பலை, சினிமா பாணியில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சையது ஒலி. இவரை திண்டுக்கல்லை சேர்ந்த பாலகிருஷ்ணன், குமரியை சேர்ந்த சீனு, பினோய் தொடர்பு கொண்டு, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுலைமான் கல் எனப்படும் நவரத்தின கல் இருப்பதாக கூறியுள்ளனர். இதனை விற்றுத் தந்தால் 50 கோடி ரூபாய் கமிஷன் தருவதாக கூறியதால், சையது ஒலி திண்டுக்கல் சென்றார். ஓட்டலில் அவரை சந்தித்து நவரத்தின கல்லை காண்பித்து, முன்பணமாக 5 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பியோடினர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சையது ஒலி, 50 லட்சம் ரூபாய்யை திருடிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த போலீசார், நெடுஞ்சாலையில் விரட்டிச் சென்று தோமையார்புரத்தில் சீனு மற்றும் பினோயை சுற்றி வளைத்து கைது செய்தனர். தலைமறைவான பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர். விசாரணையில், அதிகமான தொகை பறித்துவிட்டாக கூறினால்தான் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று சையது ஒலி கூறியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்