தற்போதைய செய்திகள்

தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக திறக்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை

தந்தி டிவி

தந்தி செய்தி எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 180 மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர்

தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள், கிராமத்திற்கு பகுதி நேர ரேசன் கடை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தோட்டக்கணவாய் கிராம மக்களின் கோரிக்கை தந்தி டிவி செய்தியாக ஒளிபரப்பானது. இதையடுத்து கோரிக்கையை ஏற்று கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. அப்போது, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தந்தி டிவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்