தற்போதைய செய்திகள்

தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக திறக்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை

தந்தி டிவி

தந்தி செய்தி எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 180 மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர்

தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள், கிராமத்திற்கு பகுதி நேர ரேசன் கடை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தோட்டக்கணவாய் கிராம மக்களின் கோரிக்கை தந்தி டிவி செய்தியாக ஒளிபரப்பானது. இதையடுத்து கோரிக்கையை ஏற்று கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. அப்போது, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தந்தி டிவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு