தற்போதைய செய்திகள்

"இரண்டு கைகளையும் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை நடத்தும் மாற்றுத்திறனாளி"

தந்தி டிவி

"இரண்டு கைகளையும் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை நடத்தும் மாற்றுத்திறனாளி" - பீனிக்ஸ் மனிதர் முத்து

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர், 17 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இரு கைகள், இடது கால் விரல்களை இழந்துள்ளார். வறுமையில் தவித்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 16 ஆண்டுகளாக செல்போன் பழுது நீக்கம், புதிய செல்போன் விற்பனை, ரீச்சார்ஜ் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், கார், வேன், டிராக்டர் உள்ளிட்டவை வாங்கி டிராவல்ஸ் நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்னை போல் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என, முத்து கூறியுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்