தற்போதைய செய்திகள்

ஒரு லிட்டர் பால் ரூ.210.. ஒரு கிலோ கோழி கறி ரூ.500... - கடும் நிதி நெருக்கடியில் தடுமாறும் பாக்.

தந்தி டிவி

கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானில், பால் விலை லிட்டருக்கு 210 பாகிஸ்தான் ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில், பிராய்லர் கோழி விலை கிலோவிற்கு 500 பாகிஸ்தான் ரூபாயாக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு விகிதம் 27.6 சதவீதமாக கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கோதுமை மாவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானின் அன்னிய கடன் சுமை 12 ஆயிரத்து 691 கோடி டாலராக உள்ள நிலையில், அதன் வசம் உள்ள அன்னிய செலாவணி அளவு 291 கோடி டாலராக சரிந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்ய போதுமான டாலர் இல்லாததால், பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் 650 கோடி டாலர் அளவுக்கு அவசர கடன் பெற பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதால், கடன் பெறுவது தாமதமாகி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்