தற்போதைய செய்திகள்

மேல் அதிகாரி திட்டியதால் மயக்கம் போட்ட அரசு ஊழியர்

தந்தி டிவி

சிவகங்கையில் சமூக நலத்துறை அதிகாரி திட்டியதால், செயல் அலுவலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் அன்பு குளோரியா. இவர், சமூக நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பணி புரியும் செயல் அலுவலரான சத்தியபாமாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதில், ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்தியபாமா, திடீர் மயக்கம் அடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்சமயம் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க சக ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்