தற்போதைய செய்திகள்

எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்

தந்தி டிவி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை உச்சநீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது. இதற்கு முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்சி எதிர்ப்பு தெரிவித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், யாரையும் விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அனுஷ்யாவை அநாகரிகமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து, தொலைபேசியில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை