தற்போதைய செய்திகள்

மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்

தந்தி டிவி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளி பெண் தன் மகனுடன் வந்து கோரிக்கை மனு அளித்தார். சுண்டுக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. மாற்றுத்திறனாளியான இவருக்கு ராமசாமி என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இவர்களது மகன் 1 வயது குழந்தையாக இருக்கும் போது, தனது மனைவியை ராமசாமி விட்டுச் சென்றுள்ளார். இவரை உடன் பிறந்தவர்களும் கைவிட்டுள்ள நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக அரசு சார்பில் குடியிருக்க வீடு அல்லது சுயதொழில் செய்வதற்கான பொருளாதார உதவி செய்து தருமாறு பானுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை