தற்போதைய செய்திகள்

வீட்டில் உறங்கி கொண்டிருந்த தம்பதி..திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் - வெச்சி விளாசிய மக்கள்.. சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கத்தில், கஞ்சா போதையில் குழந்தைகளிடம் அத்துமீறிய இளைஞரை தர்ம அடி கொடுத்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பட்டினப்பாக்கத்தில் குழந்தைகளுடன் தம்பதி இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்த தாய், வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டறிந்துள்ளார். தனது 11 மாத குழுந்தை மற்றும் 6 வயது மகளுடன் அத்துமீறுவதைக் கண்டு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், அந்த இளைஞரை பிடித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. எப்போதும் கஞ்சா போதையில் இருக்கும் அவர், ஏற்கனவே இதே போன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் போதை இளைஞருக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்