தற்போதைய செய்திகள்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கண்ணாட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜென்சிமலருக்கும், வார்டு கவுன்சிலர் கிரிஜாவிற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜென்சிமலர் வீட்டில் புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்ககேட்டு இரணியல் பேரூராட்சியில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கிரிஜா மற்றும் அவரது கணவர் பிரபுராஜ், ஜென்சிமலரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த, போலீசார் தலைமறைவான தம்பதியினரை தேடி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?