தற்போதைய செய்திகள்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கண்ணாட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜென்சிமலருக்கும், வார்டு கவுன்சிலர் கிரிஜாவிற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜென்சிமலர் வீட்டில் புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்ககேட்டு இரணியல் பேரூராட்சியில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கிரிஜா மற்றும் அவரது கணவர் பிரபுராஜ், ஜென்சிமலரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த, போலீசார் தலைமறைவான தம்பதியினரை தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ